1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2022 (19:22 IST)

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வழக்கில் நாளை தீர்ப்பு!

velumani
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணியின் வழக்குகள் குறித்த தீர்ப்பு நாளை வெளியாக இருப்பதை அடுத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் டெண்டர் முறைகேடு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பதை இந்த வழக்குகளின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த வழக்கின் இரு தரப்பு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் விரைவில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்பதை நாளை வரை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran