தொடர்புடைய செய்திகள்
- அவமானம், அலட்சியம் கடந்தால் வெகுமானம் நிச்சயம்! தன்னம்பிக்கை கட்டுரை!
- இன்று 23 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!
- பத்தல.. பத்தல..! ஊதிய உயர்வு ஒப்பந்தம்! – தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு!
- 'Go Back Stalin' ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக காரணம் என்ன? முதல்வர் கோவை பயணமும் பாஜக எதிர்ப்பும்
- நாளை நடக்க இருந்த பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு! – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! – எந்தெந்த சுங்கச்சாவடிகளில்?
தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 50 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 22 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தற்போது மீதமுள்ள 28 சுங்க சாவடிகளில் வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. கார், வேன் போன்ற வாகனங்களுக்கு 5 ரூபாயும், கனரக வாகனங்களுக்கு ரூ.150 வரை சுங்கக்கட்டணம் உயர வாய்ப்புள்ளது.
அதன்படி, சமயபுரம் சுங்கசாவடி, கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர், மதுரை எலியார்பதி, நாமக்கல் ராசம்பாளையம், தஞ்சை வாழவந்தான் கோட்டை, குமாரபாளையம் விஜய மங்கலம், விக்கிரவாண்டி மொரட்டாண்டி, உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி, வீரசோழபுரம், சேலம் மேட்டுபட்டி, திண்டுக்கல் கொடைரோடு, தர்மபுரி பாளையம், விருதுநகர் புதூர்பாண்டியாபுரம், திருப்பராய்த்துறை, பொன்னம்பலப்பட்டி, சேலம் ஒமலூர், நத்தக்கரை, வைகுந்தம் உள்ளிட்ட 28 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
அடுத்த கட்டுரையில்
