1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 20 மே 2021 (19:11 IST)

தமிழகத்தில் மின்சார கட்டணம்: நுகர்வோரே கணக்கிட மின்சார வாரியம் அனுமதி!

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்த நேரத்தில் மின்சார கட்டணத்தை முந்தைய மாதக் கட்டணத்தை செலுத்த மின்சாரவாரியம் அறிவுறுத்திய நிலையில் தற்போது அதே நிலை தொடருமா என்ற கேள்வி மின் நுகர்வோர்கள் மத்தியில் ஏற்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழகத்தில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது. மின் மீட்டரில் உள்ள அளவை புகைப்படமாக தங்கள் மின்வாரிய உதவி பொறியாளர் அனுப்பிவைத்து ஆன்லைனில் மின் கட்டணத்தை செலுத்த மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது
 
இதனால் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ மின்கட்டணம் கட்டும் நிலை ஏற்படாது என்பது குறிப்பிடதக்கது. மின்சார வாரியத்தின் இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது