1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (18:57 IST)

மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்தும்: அமைச்சர் துரைமுருகன்

தமிழக அரசே மணல் குவாரிகளை விரைவில் ஏற்று நடத்தும் என அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார் 
 
மணல் குவாரிகள் தற்போது தனியார் வசம் இருந்து வரும் நிலையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது 
 
இந்த நிலையில் இன்று கண்டியில் நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் சங்கம் கூட்டத்தில் கலந்துகொண்ட துரைமுருகன் மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்துவது குறித்து ஆலோசனை செய்தார்
 
இதனை அடுத்து நீர்வளத் துறை மூலம் மணல் குவாரிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தமிழக அரசை அனைத்து நலன்களையும் விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்