1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 22 ஆகஸ்ட் 2018 (08:26 IST)

8 வழிச்சாலை திட்டம்: மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டம்

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்காக கடந்த சில மாதங்களாக அந்த பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி நிலம் கையகப்படுத்தப்பட்டு வந்த நிலையில் பாமக எம்பி அன்புமணி உள்ளிட்ட ஒருசிலர் தாக்கல் செய்த வழக்கில் நிலம் கையகப்படுத்த சென்னை ஐகோர்ட் நேற்று இடைக்கால தடை விதித்தது
 
இந்த தடையை சேலம் பகுதி மக்களும் எதிர்க்கட்சிகளும் வரவேறுள்ள நிலையில் சென்னை ஐகோர்ட்டின் இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதி செய்துள்ளார்.
 
8 வழிச்சாலைக்கு எதிராக சேலம் பகுதி மக்களும், தன்னார்வ அமைப்புகளும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது