1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 16 மே 2022 (22:54 IST)

ஒரு நாளுக்கு மட்டும்தான் பெட்ரோல் உள்ளது - இலங்கை பிரதமர்

Ranil Wickramasinghe
இலங்கையில் பொருளாதாரப் பற்றாக்குறை நீடித்து வரும் நிலையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமிங்கே பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.
 
இந்த நிலையில், நாட்டின் பொருளாதார நிலமை குறித்து, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நாட்டு மக்களிடம் பேசினார். அதில், நமது நாட்டின் பொருளாதார நிலமையைச் சீர் செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவை எனத் தெரிவித்தார்.
 
மேலும், நான் பொறுப்பெற்றுள்ளது என்பது கத்தியின் மேல் நடபது போல் சவாலானது.

நமது கையிருப்பாக ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது. இந்தியா கடன் உதவி செய்துள்ளதால், வரும் மே 19 மற்றும் நூன் 1 ஆகிய்ட தேதிகளில் 2 டீசல் கப்பல்களும் மே, 18, 19 ஆகிய தேதிகளில் 2 பெட்ரோல் கப்பல்களும் வரவுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.