1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (14:49 IST)

பெண்களை சமூகவலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்த நபர் கைது!

சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களின் வருகை தற்போது அதிகரிப்பால் சாதாரண மக்கள் முதல் கோடீஸ்வர்கள் வரை எல்லோரும் இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இதன் மூலம் பல நன்மைகள் இருந்தாலும், இதை தவறாகப் பயன்படுத்தி அதன் மூலம் பலர் பாதிக்கப்பட்டு வருவதும் இதனால் பலர் தவறான முடிவுக்கு வருவதும்  நடந்து வருகிறது.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடியில் வசிக்கும் மணிகண்டன் என்ற கட்டிடத்தொழிலாளி சென்னை விருகம் பாக்கத்தில் வசித்து வந்தார்.

இவர் பெண்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் மணிகண்டனை போலீஸார் கைது செய்துள்ளனர்.