வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 27 பிப்ரவரி 2020 (21:23 IST)

சிங்கத்தை பிடித்துச் சென்ற ’’ எமனுக்கு கண்டன ’ போஸ்டர் ... எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...

சிங்கத்தை பிடித்துச் சென்ற ’’ எமனுக்கு கண்டன ’ போஸ்டர் ... எப்டி எல்லாம் யோசிக்கிறாங்க...

மதுரை மாவட்டத்தில் ஒரு பிரபல அரசியல்  பிரமுகர் உயிரிழந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள்  எமதர்மனுக்கு கண்டன போஸ்டர்   அடித்து ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
தமிழகத்தில் ஒரு காலத்தில் போஸ்கர் கலாச்சரம் இருந்தது.என்றாலும் பிளக்ஸ் வந்த பிறகு, அது நடு ரோடு மற்றும் இரு மருங்கிலும் அரசியல் கட்சியினர் வைத்திருந்தனர். பின்,சென்னையில் சுபஸ்ரீயின் மரணத்திற்குப் பிறகு, அது பரவலாகக் காணப்படவில்லை. இந்நிலையில்  போஸ்டர் கலாச்சாரம் வேகமாகப் பரவி வருகிறது.

அதில், மதுரை வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த அய்யாவு கடந்த 25 ஆம் தேதி காலை இறந்தார்.இவர் 51 வது வட்ட திமுக பிரதிநி அடைக்கலத்தின் தந்தையாவார். எனவே, அவரது தந்தையின் இறப்புக்கு ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர், அதில், சிங்கத்தை பிடித்துச் சென்ற எமனுக்கு மாபெரிம் கண்டனம் என பதிவிட்டுள்ளனர்.