1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (23:38 IST)

தமிழகத்தில் முதல் தானியங்கி மதுபான இயந்திரம் அறிமுகம் i!

drinks
சென்னை கோயம்பேட்டியில் முதல் தானியங்கி மதுபான விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செய்யும் இயந்திரத்தை டாஸ்மாக் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.

இந்த எந்திரம் ஏடிஎம் இயந்திரம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதிலுள்ள தொடுதிரை மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான மதுபான வகையைத் தேர்வு செய்து, கிரேட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணத்தைச் செலுத்தினால். தானாக மதுபானம் வெளியே வரும் வகையில், இதை வடிவமைத்துள்ளனர்.

வெளி நாடுகளில் உள்ளது போன்ற  தானியங்கி மதுபான விற்பனை தொடங்கியுள்ளது மதுபான பிரியர்கள் வரவேற்றுள்ளனர்.