1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 20 ஜூன் 2020 (23:01 IST)

கோவையில் பிரபல நகைக் கடைக்கு சீழ்...

கோவையில் உள்ள பிரபல தங்க நகைக்கடைக்கு சென்னைக் கிளையில் இருந்து உரிய இ – பாஸ் பெறாமல் 30 ஊழியர்களை  அழைத்து வந்து பணியாற்ற வைத்ததாக சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலை அடுத்து இன்று மாநகராட்சி அதிகார்கள் மற்றும் போலீஸார் அந்தக் கடைக்கு சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தி சோதனை செய்தனர்.

பின்னர், 30 ஊழியர்களை இ – பாஸ் இல்லாமல் அழைத்து வந்ததை அடுத்து, கடைக்குச் சீல் வைத்தனர்.இதையடுத்து,  ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 180 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சென்னையில் இருந்து அழைத்து வந்தவர்களை தனிமைப்படுத்தாமல் வேலைக்கு அமர்த்தியதால் அக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.