ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 ஏப்ரல் 2021 (09:16 IST)

கொரோனா அதிகமுள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்? – தலைமை செயலாளர் ஆலோசனை!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தொற்று அதிகமுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகம் முழுவதும் க்ரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 16 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்கலாமா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.