1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 3 ஜனவரி 2022 (10:30 IST)

மாவட்டம்தோறும் கட்டுப்பாடுகள்; படுக்கைகள் அதிகரிப்பு! – ஆட்சியர்களுக்கு உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்திருந்த நிலையில் பாதிப்புகளும் குறைந்தன. இந்நிலையில் தற்போது டெல்டா, ஒமிக்ரான் இருவகை வேரியண்டுகளும் வேகமாக பரவி வருவதால் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மீண்டும் பல கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக சுகாதாரத்துறை தலைமை செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்டங்கள்தோறும் கொரொனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தலை உறுதி செய்யவும், மருத்துவமனைகளில் படுக்கைகள் எண்ணிக்கை மற்றும் மருத்துவ வசதிகளை அதிகப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.