தொடர்புடைய செய்திகள்
- புதுச்சேரியை அச்சுறுத்தும் மழை! – தொடர்மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை!
- சேராத கூட்டாம், தீராத கவலையில் கமல்! – காத்துவாங்கும் மநீம ஆண்டு விழா!
- காவிரி – குண்டாறு இணைப்புத்திட்டம்! – அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!
- திருமண பரிசாக சின்ன வெங்காயம், பெட்ரோல்! – சென்னையில் விநோத திருமண பரிசு!
- சென்னை விரைந்த புதுச்சேரி அதிமுகவினர்! – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
தமிழகத்தில் வலுக்கும் கனமழை! – 13 மாவட்டங்களுக்கு அலர்ட்!
புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை காலம் முடிந்துவிட்ட நிலையில் வெப்பசுழற்சி காரணமாக சில பகுதிகளில் மிதமான அளவில் மழைபெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதலாக கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடலூர் நகரில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் கடலூர், புதுச்சேரி பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பேகம் என்ற பெண் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
அடுத்த கட்டுரையில்
