தொடர்புடைய செய்திகள்
- அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; நிரம்பும் மருத்துவமனைகள்! – இங்கிலாந்தில் 4 அடுக்கு ஊரடங்கு!
- ஸ்லம்டாக் மில்லியனர் இயக்குனர் பாராட்டிய இந்திய திரைப்படம்!
- நண்பருடன் படுக்கையைப் பகிர வற்புறுத்திய கணவர் – உண்மையை உடைத்த நடிகை!
- மீண்டும் தமிழுக்கு வரும் நிவின் பாலி… இயக்குனர் இவரா?
- பிராமணர்களுக்கு மட்டுமே நடக்கும் கிரிக்கெட் டோர்னமெண்ட் – சர்ச்சையைக் கிளப்பிய போஸ்டர்!
கொரோனா காரணமாக தமிழக தேர்தலில் மாற்றங்கள்! – தேர்தல் ஆணையர் தகவல்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் இருந்து வருவதால் தேர்தல் நடத்துவதில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொரோனா பாதிப்புகளும் இருந்து வருவதால் பாதுகாப்புடன் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. முன்னதாக சட்டமன்ற தேர்தல் முன்கூட்டியே நடைபெற வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்த நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா காரணமாக தேர்தலுக்கு ஒவ்வொரு வாக்குசாவடியிலும் ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும், இதனால் வாக்குசாவடி எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மற்ற மாநிலங்களில் இருந்து மின்னணு வாக்கு எந்திரங்களை கூடுதலாக கொண்டு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
