1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2020 (11:32 IST)

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 74 ஆக உயர்வு

தமிழகத்தில் 67 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியிருந்த நிலையில், தற்போது மேலும் 7 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில், திருவனந்தபுரத்தில் இருந்து வந்த ஒருவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த உள்ளூர் நபருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இவர் கொரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதுத்தவிர விழுப்புரம் மற்றும் மதுரையை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 67லிருந்து 74 ஆக உயர்ந்துள்ளது.