1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 பிப்ரவரி 2021 (09:27 IST)

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை சவுந்தரராஜன்!

புதுவை துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி சமீபத்தில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று முறைப்படி தமிழிசை சவுந்தரராஜன் புதுவை மாநில துணை நிலை ஆளுநர் ஆக பொறுப்பேற்றார் 
 
இந்த பதவியேற்பு விழாவில் புதுவை முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். தெலுங்கானா ஆளுனராக பொறுப்பு வகித்து வரும் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார் 
 
தெலுங்கானா மாநில ஆளுனராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் புதுவை துணைநிலை ஆளுநர் ஆக கூடுதலாக பொறுப்பேற்றவுடன் உறுதிமொழியையும் ஏற்றார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது