ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: திங்கள், 23 செப்டம்பர் 2019 (21:19 IST)

விஸ்வ ஜெயந்தி விழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகழாரம்.

விஸ்வகர்மா சமுதாயத்தினர் என்றென்றும் அதிமுக என்ற இயக்கத்திற்கு விசுவாசமானவர்கள் - கரூரில் நடைபெற்ற விஸ்வ ஜெயந்தி விழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகழாரம்.
 

கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள விஸ்வகர்ம திருக்கோவிலில் விஸ்வஜெயந்தி விழா நடைபெற்றது.இன்று காலை முதல்  மஹா யாக பூஜை அபிஷேகம் விஸ்வ ஜெயந்தி ஊர்வலம் அன்னதானம் என பல்வேறு நிகழ்ச்சியுடன் துவங்கிய விழா பெரியசாமி ஆச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இவ்வமைப்பின் மாவட்ட தலைவர் கருப்புசாமி  தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க தலைவர் சண்முகநாதன் பொது செயலாளர் தனுஷ்கோடி உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இநிகழ்வில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்திய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தமிழ்த்திறை உலகில் முதல் முடிசூடா மன்னனாக இருந்த தியாகராய பாகவதரை கௌரவ படுத்தும் வகையில் அவருக்கு  திருச்சியில் மணி மண்டபம் அமைப்பதற்கு 50-லட்சம் ஒதுக்கி தந்து உங்களது சமுதாயத்தை கௌரவித்தது அனைத்திந்திய அண்ணா திமுக என்பதை எண்ணி பார்க்க வேண்டும் என்றும் பின்னர்தியாகராஜ பாகவதர் இடத்தை பிடிக்க கடைசி வரை கதாநாயகனாக நடித்து  தமிழக மக்களின் இதயங்களில் இடம் பிடித்த எம்.ஜி.ஆர் அவர்கள்.அதன் பிறகும் கூட அவரது வழியில் வந்த முதலமைச்சர் அம்மா அவர்கள் உங்களது சமுதாயத்தை கௌரவ படுத்தும் வகையில் வரவேற்பு கொடுத்தவர்.அந்த வகையில் விஸ்வகர்மா சமுதாயத்தினர் என்றென்றும் அதிமுக என்ற இயக்கத்திற்கு விசுவாசமானவர்கள் என்றார்