ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2022 (14:01 IST)

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை – 5 நாட்களுக்கு நீடிக்கும்!

இன்று தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

மேலும் நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் கணிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரியில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.