1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (13:08 IST)

தமிழகத்தில் 29 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை!

தற்போது வெளியான தகவலின் படி தமிழகத்தில் 29 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்.


தமிழகத்தில் வரும் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என முன்னர் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. ஜூலை 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி தமிழகத்தில் 29 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களிலும், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.