1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 9 ஜனவரி 2022 (13:02 IST)

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மழை!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 
தமிழகத்தில் ஏற்கனவே நான்கு நாட்கள் மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மேலும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்தது. 
 
இந்நிலையில் தற்போது ஜனவரி 11, 12 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.