வியாழன், 29 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (15:15 IST)

மாநகராட்சியாகிறது தாம்பரம் !!!

மாநகராட்சியாகிறது தாம்பரம் !!!
தமிழக அரசு பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதிய மாநகராட்சியை உருவாக்கியுள்ளது. 
 
காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, பொன்னேரி, சோளிங்கர், திருநின்றவூர், இடங்கனசாலை, தாராமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டக்குப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லன்கோடு , முசிறி, லால்குடி ஆகிய பேரூராட்சிகள் அதன் வளர்ச்சியடைந்த ஊராட்சிகளை ஒன்றிணைந்து நகராட்சிகளாக மாற்றப்படும். 
 
தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூரை ஒன்றிணைத்து மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.