வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 6 டிசம்பர் 2018 (20:18 IST)

சென்னை ஓட்டல்களில் திடீரென குவிந்த கூட்டம்! ஏன் தெரியுமா?

சென்னை உள்பட பெருநகரங்களில் தற்போது வீடுதேடி உணவு சப்ளை செய்யும் ஸ்வக்கி நிறுவனத்தை தான் பெரும்பாலானோர் நம்பியுள்ளனர்.  கணவன், மனைவி இருவரும் வேலை செய்யும் வீட்டில் பெரும்பாலும் டின்னர் ஸ்வக்கியை நம்பித்தான் உள்ளது. ஆன்லைன் செயலி மூலம் தேவையான உணவை ஆர்டர் செய்தால் அதிகபட்சம் அரை மணி நேரத்தில் வீடு தேடி உணவு வந்துவிடும்

இந்த நிலையில் இன்று முதல் திடீரென ஸ்வக்கி டெலிவரி பாய்ஸ் வேலைநிறுத்தம் செய்துள்ளனர். இதுவரை 4 கிலோமீட்டர் தொலைவுக்கு ரூ.36 ரூபாய் ஊதியமாக அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது திடீரென ஒரு ரூபாய் குறைத்து ரூ.35ஆக குறைக்கப்பட்டதாகவும், மேலும் 4 கிலோமீட்டருக்கு அதிகமான தொலைவுக்கும் ஊதியம் கணிசமாக குறைக்கப்பட்டதாகவும் கூறி ஸ்வக்கி டெலிவரி பாய்ஸ் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக ஸ்வக்கி செயலியில் செய்யப்பட்ட ஆர்டர்கள் சப்ளை ஆகவில்லை என்பதால் சென்னைவாசிகள் இன்று திண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி வேறு வழியின்றி ஓட்டல்களில் பொதுமக்கள் நேரடியாக செல்வதால் பெரிய ஓட்டல்களில் இன்று வழக்கத்தை விட அதிக கூட்டம் இருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.