1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 23 நவம்பர் 2019 (15:20 IST)

சினிமா கூத்தாடிகள் ஒன்னும் கிழிக்க மாட்டாங்க ... சீண்டிய சுப்பிரமணியன் சுவாமி!!

ரஜினி அரசியல் பற்றி பேசுவது அவருடைய படத்திற்காகத்தான் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 
 
கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியதிலிருந்து மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து வருகிறார். அதே போல் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றாலும் கூட அரசியலுக்குள் நுழைவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருவதால் தமிழகத்தில் வெற்றிடம் நிலவுகிறது என அடிக்கடி பேசி வருகிறார்.
 
இந்நிலையில் நானும் ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தமிழக மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிப்போம்” என கூறினார். இதனை தொடர்ந்து சமீபத்தில் ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், ”தேவைப்பட்டால் இருவரும் தமிழக மக்களின் நலனுக்காக சேர்ந்து பயணிப்போம் என கூறியுள்ளார்.
 
இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது, சினிமா கூத்தாடிகள் தமிழகத்திற்கு ஒன்றும் செய்யமாட்டார்கள். ரஜினி பல காலமாக அரசியலுக்கு வருகிரேன் வருகிறேன் என கூறி வருகிறார். அடுத்து அவர் படம் ஒன்று வெளியாக உள்ளதால் இப்படி பேசி வருகிறார் என தெரிவித்துள்ளார்.