1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (18:01 IST)

வேறு பள்ளிக்கு மாற்ற பெற்றோர் சம்மதிக்காததால் 15 வயது மாணவர் தற்கொலை!

suicide
வேறு பள்ளிக்கு மாற்ற சம்மதிக்காததால் 15 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி அடைய செய்துள்ளது 
 
திருவாரூர் அருகே ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தன்னை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என பெற்றோரிடம் கேட்டுள்ளார்
 
ஆனால் அவரது பெற்றோர்கள் சம்மதிக்காததால் பெட்ரோல் ஊற்றி திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும்
 
இதேபோல் 15 வயது பள்ளி மாணவி ஒருவர் தன்னை பெற்றோர் ஷாப்பிங் அழைத்து செல்லவில்லை என்பதால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது 
 
இன்றைய இளம் வயது குழந்தைகள் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் தற்கொலை செய்து கொள்வது பெற்றோர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது