1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 20 ஜனவரி 2022 (15:06 IST)

விமான விபத்தில் உயிரிழந்த பிபின்ராவத்துக்கு கும்பகோணத்தில் சிலை!

விமான விபத்தில் இறந்த இந்திய முப்படைத் தளபதி பிபின் ராவத்துக்கு கும்பகோணத்தில் மார்பளவு சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு இறுதியில் குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிபின் ராவத்துக்கு கும்பகோணம் நாகேஸ்வரன் வீதியில் உள்ள சிற்பக்கூடத்தில் அவருக்கு 120 கிலோ எடையில் ஐம்பொன் சிலை வடிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஷைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் வெல்பேர் பவுண்டேஷன் சார்பில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. சிலை வடிக்கும் பணி முடிந்ததும் டெல்லியில் டெல்லியில் உள்ள ராணுவ போர் நினைவு சின்னத்தில் வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.