1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (08:25 IST)

25 தமிழக மீனவர்கள் மீண்டும் கைது.. தொடர்கதையாகும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்..!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி உள்ளது என்பதும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக மீனவர்கள்  மத்திய மாநில அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இலங்கை கடற்படை கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது

இந்த நிலையில் இன்று தமிழகத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 25 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளன.

அதுமட்டுமின்றி அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து நாகை மற்றும்  காரைக்கால் பகுதி மீனவர்கள் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விட்டுள்ளனர்.

Edited by Siva