செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 20 அக்டோபர் 2018 (11:58 IST)

காவிரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட 6 மாணவர்களின் சடலங்கள் மீட்பு

பாபநாசம் அருகே காவிரியாற்றில் மூழ்கி உயிரிழந்த  6 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் என்ற  பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மணிகண்டன், வெங்கடேசன், பள்ளி மாணவர்கள் கதிரவன், விஷ்ணு, சிவபாலன், ஸ்ரீநவீன், சஞ்சய் போன்ற  7 பேர் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர் அப்போது  ஆற்றின் ஆழமானப் பகுதிக்கு சென்ற இவர்களில் சஞ்சய் என்பவர் மட்டும் நீந்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
 
மற்ற 6 மாணவர்களும் ஆற்றில் மூழ்கிவிட்டனர் , இதனால் பதறிய அப்பகுதி மக்கள்  தீயணைப்புப் படையினரின் உதவியுடன் அவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் 3 மணி நேர தேடுதலுக்குப் பிறகு 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
 
மேலும், நீரில் மூழ்கிய கதிரவன் தீவிர தேடுதல்களுக்கு பிறகு, சடலங்களும் கண்டறிந்தனர். மீட்புப் பணிகளை தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் நேரில் பார்வையிட்டார். 
 
விடுமுறையில் ஆற்றில் குளிக்க  சென்ற 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்  கபிஸ்தலம் பகுதி மக்களை  பெரும் சோகத்தில்  ஆழ்த்தியுள்ளது.