1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 19 ஏப்ரல் 2018 (17:31 IST)

பியூஸ் மானுஸ்வுடன் ஏரிகளை பார்வையிட்ட சிம்பு: திட்டம் என்ன?

தமிழகமே கடந்த சில நாட்களாக காவிரிக்காக போராடி கொண்டிருந்த நிலையில் நடிகர் சிம்பு சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது கர்நாடகத்திடம் தண்ணீர் கேட்கும் நாம், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்தோமா? என்ற கேள்வியை எழுப்பினார்.
 
மேலும் கேள்வி எழுப்புவது மட்டுமின்றி தற்போது அவர் களத்திலும் இறங்கிவிட்டார். சேலம் பகுதியில் சேலம் மக்கள் குழு' என்ற அமைப்பின் மூலம் பியூஷ் மானுஸ் என்பவர் பொதுமக்களின் உதவியுடன் மூக்கனேரி உள்பட ஒருசில ஏரிகளை தூர் வாரினார் என்பது தெரிந்ததே. குப்பையுடன் காட்சி அளித்த அந்த ஏரி தற்போது தூர்வாரப்பட்டதால் மக்களின் பயன்பாட்டுக்கு தேவையான தண்ணீரை உள்ளடக்கியுள்ளது.
 
இந்த ஏரிகளை பரிசலில் சென்று இன்று பியூஷ் மானுஸ்வுடன் பார்வையிட்ட சிம்பு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'இங்குள்ள ஏரிகள் தூர்வாரப்பட்டது குறித்து அறிந்து கொண்டேன். இதேபோல் இன்னும் தமிழகத்தில் பல ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் தூர்வாரப்பட வேண்டிய நிலையில் உள்ளது. அதுகுறித்து பியூஷ் மானுஷ் அவர்களுடன் பேசியுள்ளேன். விரைவில் இதுகுறித்த திட்டம் ஒன்றை அறிவிப்பேன். இது அரசியல் கிடையாது மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து நான் எடுக்கும் ஒரு சிறு முயற்சி' என்று கூறினார்.