1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2023 (16:07 IST)

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு.. தீர்ப்பு எப்போது? நீதிமன்றம் அதிரடி..!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தேதி குறித்த தகவலை தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட நிலையில் அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 
 
இந்த நிலையில்  ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
 
 இந்த மனு மீது விசாரணை நடந்த போது அமலாக்கத்துறை தரப்பில் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த நிலையில் இருதரப்பின் வாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில்  தற்போது தீர்ப்பு தேதி எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 
செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தேதியை ஒத்திவைத்து சென்னை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இன்னும் ஓரிரு நாளில் இந்த மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran