வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 செப்டம்பர் 2021 (13:36 IST)

மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவை போல செயல்படுகிறார்! – செல்லூர் ராஜூ புகழாரம்!

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போல செயல்படுவதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு துறைகளிலும் மாற்றங்கள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களில் பல ஆயிரம் ரௌடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக கடைபிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ரௌடிகளை ஒடுக்குவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போல செயல்படுகிறார்” என கூறியுள்ளார்.