தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாட்டில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு
- பொங்கலுக்கு கரும்பு தறாங்க.. பணம் தரலை! – எடப்பாடியார் குற்றச்சாட்டு!
- விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு: 21 ஆன பொங்கல் பரிசு பொருட்கள்!!
- பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு ஏன் இல்லை? விவசாயிகள் வருத்தம்!
- பொங்கல் பரிசாக தமிழக அரசு கொடுக்கும் 20 பொருட்கள்: என்னென்ன தெரியுமா?
தமிழக அரசுக்கு நன்றி கூறிய சீமான்
தமிழக அரசின் பொங்கல் பரிசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார் சீமான்.
சமீபத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு 20 பொருட்கள் அடங்கிய துணிப்பை பரிசாக கொடுக்கவிருப்பதாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பலதரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில், நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில், பொங்கல் பண்டிக்கைக்கு தமிழக அரசு 20 பொருட்கள் அடங்கிய துணிப்பை பரிசாக கொடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: பெரும் பொருளாதார நலிவு நிலையிலிருக்கும் ஈழச்சொந்தங்களுக்கு ஆறுதலளிக்கும் விதத்தில், பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்கு ஏதுவாகப் பொருட்களை வழங்குவதாகக் கூறியிருக்கும் தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். அதற்கு எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்! எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
