1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 டிசம்பர் 2020 (11:11 IST)

ரஜினி, கமலை அடிக்கிற அடியில விஜய் பயப்படணும்! – சீமான் தாக்கு அட்டாக்கு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போட்டியிடுவது குறித்து நா.த,க ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தல்களிலேயே எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் தமிழகம் முழுவதும் பரபரப்பை அதிகமாக ஏற்படுத்தி வருகிறது. ஒருபக்கம் அதிமுக, திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் தங்கள் அரசியல் பிரச்சாரங்களுக்கு வியூகம் வகுத்து நிற்க, மறுபுறம் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனும், புதிய கட்சி தொடங்கும் ரஜினிகாந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வர இருப்பதாக பல காலமாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர்களின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ள நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் “நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் எம்ஜிஆரை ஒரு கருவியாக பயன்படுத்து புகழ்ந்து பேசி வருகிறார். எம்ஜிஆர் அப்படி என்ன நல்லாட்சி கொடுத்துவிட்டார்? பிரபாகரனுக்கு உதவியதால் மட்டுமே அவரை மதிக்கிறோம்! அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி, கமலை அடிக்கிற அடியில் விஜய் கூட அரசியல் கட்சி தொடங்க பயப்பட வேண்டும்” என பேசியுள்ளார்.