1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2023 (06:49 IST)

தென் மாவட்டங்களில் கனமழை எதிரொலி.. எந்தெந்த பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தெருக்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து தற்போது பார்ப்போம்

தொடர் கனமழை காரணமாக தேனி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva