சசிகலாவுக்கு தபால் வாக்கு வழங்கவேண்டும்…. அமமுக வேட்பாளர் கோரிக்கை!

செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (07:49 IST)
சசிகலா பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவருக்கு தபால் வாக்கு வழங்கவேண்டும் என அமமுக வேட்பாளர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஜெயலலிதாவின் உற்ற தோழியுமான சசிகலா அவருடன் போயஸ் கார்டன் இல்லத்தில் 30 ஆண்டுகளாக வசித்துவந்தார். அதனால் அவருக்கு வாக்கு அங்கேயே அளிக்கப்பட்டு இருந்தது.  ஆனால் அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற பின் அந்த வீடு அரசுடைமையாக்கப்பட்டதால் சசிகலா உள்ளிட்ட 19 பேரின் பெயர் அந்த பகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

சிறை தண்டனை பெற்று அவர் வெளியே வந்தும் தேர்தல் ஆணையத்தில் பேர் சேர்க்க சொல்லி விண்ணப்பித்தும் அவர் பெயர் இன்னும் சேர்க்கப்படவில்லை. அதனால் அவர் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் அமமுகவின் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர், ஆவின் வைத்தியநாதன் தலைமை தேர்தல் அதிகாரியிடம் இது தொடர்பாக புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ‘சசிகலாவுக்கு தபால் ஓட்டு வழங்கவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

உலகமே உங்கள சுத்திதான் இயக்குற மாதிரி நினைப்பா?!. விஜய்க்கு பழனிச்சாமி பதிலடி...

நாங்கலாம் கோட் சூட் போடக்கூடாதா?.. இதான் காரணம்!.. திருச்சியில் விஜய் அனல் பேச்சு!....

கதறுங்க!. கல்யாண வீட்லலாம் போய் ஏன் பொலம்புறீங்க?!.. திமுகவை நக்கலடித்த முதல்வர் விஜய்..

இந்த விஜய் கேள்வி கேட்பான்!.. சும்மா இருக்கமாட்டான்!.. திருச்சியில் முதல்வர் பேச்சு!..

துரதிஷ்டவசமாக திமுக கூட்டணியில் இருக்கிறோம்.. துரை வைகோ ஓப்பன்.,.

அடுத்த கட்டுரையில்
Show comments