வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (22:50 IST)

அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு சசிகலா இரங்கல்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என சசிகலா தெரிவித்துள்ளார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 20 ஆம் தேதியிலிருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சிகிச்சை சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார்.

இவரது மறைவு குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும், அதிமுகவின் எத்தனையோ சோதனையான காலக்கட்டத்தில்  அதிமுகவிற்குத் துணையாக நின்றவர் எனத் தெரிவித்துள்ளார்.