1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 13 டிசம்பர் 2016 (16:23 IST)

நீங்கதான் வழி நடத்தனும் - சசிகலாவிற்கு கோரிக்கை வைத்த சரத்குமார்

அதிமுக கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று சசிகலா வழிநடத்த வேண்டும் என நடிகரும் சமத்துவ கட்சி தலைவருமான சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ஜெயலலிதா மரணம் அடைந்து சில நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், பொதுமக்கள், அதிமுக நிர்வாகிகள், மற்ற கட்சியினர் என பலரும் போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலியும், சசிகலாவிற்கு ஆறுதலும் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் சமத்துவ கட்சித் தலைவர் சரத்குமார், தனது மனைவி ராதிகாவுடன் இன்று காலை போயஸ் கார்டன் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெ.வின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, சசிகலாவிற்கு ஆறுதல் கூறினார்.
 
அதன்பின்  அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் “அம்மாவின் வீட்டிற்கு இதுபோன்ற சூழ்நிலையில் வந்திருப்பது வருத்தமாக உள்ளது. அவர் மரணம் அடையவில்லை. தமிழக மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். 
 
அவர் விட்டுச் சென்ற பணியை அவருடன் 33 வருடங்கள் வாழ்ந்த சசிகலா தொடர வேண்டும். அவருக்கு அதிமுகவினர் ஒத்துழைப்பு கொடுத்து ஆதரவு அளிக்க வேண்டும்” என அவர் கூறினார்.