1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (16:57 IST)

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
 மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 7 வருட ஜெயில் தண்டனை மற்றும் 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
புதுக்கோட்டையில் ஆறு வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாரிமுத்து என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மாரிமுத்துவுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 30 ஆயிரம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று படுகிறது