1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 22 ஜூலை 2021 (20:05 IST)

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரூ.25 லட்சம் பறிமுதல்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் ரூ. 25 லட்சம் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். சுமார் 13 மணிநேரத்திற்கும் அதிகமாக சென்னை, கரூர் உள்ளிட்ட பகுதிகளில்  எம்.ஆர்.விகயபாஸ்கருக்குச் சொந்தமாக இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

இந்நிலையில் , வருமானத்துறையினரின் இந்தச் சோதனையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்து ரூ.25.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.