வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 19 அக்டோபர் 2020 (15:43 IST)

தெலுங்கானா மாநிலத்திற்கு ரூ. 10 கோடி உதவி - தமிழக முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் அண்டை மாநிலமான தெலுங்கானா மாநிலத்திற்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதி உதவி அளிப்பதாக தமிழக முதல்வர் அறித்துள்ளார்.

தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் அங்கு பல இடங்களில் வெள்ளாகாடாக நீர் சூழ்ந்துள்ளது,.

இந்த நீரால பலப்பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த மழையில் சில இடங்களில் வீடுகள் இடித்து விழுந்தன. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

எனவே வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு தமிழக மக்களின் சார்பில் ரூ.10 கோடி நிதி உதவி அளிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறித்துள்ளார்.