1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 டிசம்பர் 2021 (15:58 IST)

ஹெலிகாப்டர் விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு!

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இன்று காலை குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்பதும் இந்த ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து விமான படை தளபதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் உடனடியாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார் இந்த அறிக்கையை கையில் கிடைத்ததும் ராஜ்நாத் சிங் அவர்கள் பாராளுமன்றத்தில் இதுகுறித்து விளக்கம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.