1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (12:45 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை மையம்..!

Rain
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

வடகிழக்கு பருவ மழை மற்றும் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்தது என்பதும் சில பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, அரியலூர்,  நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் மேற்கண்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva