தொடர்புடைய செய்திகள்
- ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா.? ராதிகா சரத்குமார் காட்டம்..!
- ‘அவர ரொம்ப நம்பாதீங்க தலைவரே!’ – கட்சிக்காரரின் அட்வைஸுக்கு கலைஞரின் பதில்- வைரமுத்துவின் பதிவு!
- கேட்ட பதவி கிடைக்கவில்லை.. பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்?
- திமுக சார்பில் நீர் மோர் பந்தல்- அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார்!
- திமுக அரசின் 3 ஆண்டு ஆட்சி சாதனை அல்ல வேதனை..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறு பேச்சு.. நடிகை ராதிகா கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தன்னை பற்றி அவதூறாக பேசியதாகவும் இதனை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை ராதிகா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய போது ராதிகா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதிகா சரத்குமார் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது
இந்த புகார் மனு போது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழக ஆளுநர் மற்றும் பாஜகவின் குஷ்பு குறித்து அவதூறாக பேசியதாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு அதன் பின்னர் ஜாமினில் வெளிவந்துள்ளார் என்பதும் திமுகவிலிருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் அதன் பின்னர் மீண்டும் திமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீண்டும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? திமுகவும் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Edited by Mahendran
