வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2022 (22:24 IST)

ராணி II ஏலிசபெத் இறுதிச் சடங்கு: உலகத் தலைவர்கள் 500 பேர் அஞ்சலி!

Queen Elizabeth II
இங்கிலாந்து மகாராணியாக நீண்ட நாட்களாக அரியணையில் அந்திருந்த ராணி இரண்டாம் எலிசபெத் , கடந்த 8 ஆம் தேதி தன் 97 வயதில், உடல் நலக்குறைவால் காலமானார்.

அவர் உடல் லண்டன் மா நகரத்தில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இங்கு, பல மணி நேரத்தைப் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வைசையில் நின்று ராணிக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்தியா, பாகிஸ்தான், பிரான்ஸ்ட் உள்ளிட்ட  சுமார் 50 நாடுகளைச் சேர்ந்த 500தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பட்டது.  இந்திய குடியரசுத் தலைவர் திரபதி முர்மு, இந்தியா சார்பில்  ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்..

இந்த ஊர்வலத்தில் சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டதாகவும், ராணியின் கணவர் பிலிப்  அடக்கம் செய்யப்பட உட இடத்தின் அருகில் அவர்  நல்லடக்கம் செய்யப்பட்டார்.