1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2020 (12:07 IST)

குறுக்குசந்து உட்பட அனைத்தையும் மூடியது புதுச்சேரி! - தீவிர கண்காணிப்பு!

புதுச்சேரியில் கொரோனாவுக்கு முதல் பலி நிகழ்ந்துள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது புதுச்சேரி அரசு.

கொரோனா பாதிப்பை தொடர்ந்து தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழக – புதுச்சேரி இடையேயான முக்கிய போக்குவரத்து சாலைகள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில் புதுச்சேரியில் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு முதலாவதாக பலியாகியுள்ளார்.

அதை தொடர்ந்து புதுச்சேரி அரசு பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழக – புதுச்சேரி எல்லைகள் இடையே உள்ள ஒற்றையடி பாதை, கப்பி சாலை, குறுக்கு சந்து உள்ளிட்ட 26 சிறுவழிப்பாதைகளையும் மூடி காவல் ஏற்படுத்தியுள்ளது புதுச்சேரி அரசு. தமிழகத்தை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்குள் நுழையாமல் இருக்க நான்கு பக்கங்களிலும் பலத்த காவல் கண்காணிப்பு அமைக்கப்பட்டுள்ளது.