தொடர்புடைய செய்திகள்
- ’’குற்றவாளிகளை என்கவுன்டரில் கொல்ல வேண்டும்’’ – பிரேமலதா விஜயகாந்த்
- அந்த பொண்ணுக்கு வாய் அதிகம், அதான்... விழுப்புரம் கொடூரர்கள் பகீர் வாக்குமூலம்
- சிறுமி ஜெயஸ்ரீ கொல்லப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைக்கிறது – முதல்வர் பழனிசாமி
- ஜெயஸ்ரீயை எரித்துக் கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்குக- விஜயகாந்த் டுவீட்
- விழுப்புரம் சிறுமி எரித்து கொலை: தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்
அவங்க இரண்டு பேர்களையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
விழுப்புரம் அருகே பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் குடும்ப தகராறு காரணமாக பெட்ரோல் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எரித்துக் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தவர்களை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்தார்
இந்த சந்திப்பின்போது அவர் ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’பத்தாம் வகுப்பு சிறுமி ஜெயஸ்ரீயை எரித்துக் கொலை செய்தவர்களை போலீசார் என்கவுன்டர் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்
மேலும் வருங்காலத்தில் இதுபோன்ற கொடூர செயல்கள் நடைபெறாத வகையில் தமிழக அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சிறுமியை கொலை செய்தவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அடுத்த கட்டுரையில்
