’தமிழக மக்களின் கவனத்திற்கு’ - மழை பெய்யும்
தென்மேற்கு பருவமழை காலம் முடிந்து தற்போது வட கிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ளது.
கடந்த வாரம் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது.
இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக மத்திய வங்கக் கடலில் நேற்று காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இது மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி நகரும் பட்சத்தில் தமிழக கடலோரத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.