தொடர்புடைய செய்திகள்
- உதயநிதி ஒன்றும் கருணாநிதி கிடையாது.. கத்துக்குட்டி அவர்..! – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!
- அரசியலில் நேற்று முளைத்த காளான் உதயநிதி! – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!
- ஹெலிகாப்டர் வழியாக உணவு தருவதில் என்ன பிரச்சினை? – விமானிகளோடு எம்.பி சு.வெங்கடேசன் உரையாடல்!
- வெள்ள பாதிப்பை ஆய்வு செல்கிறார் நிர்மலா சீதாராமன்: தூத்துக்குடி வருகை எப்போது?
- நான் கிறிஸ்தவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்: உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி வாய்க்கொழுப்பெடுத்து பேசிக் கொண்டிருக்கிறார்: பொள்ளாச்சி ஜெயராமன்
உதயநிதி வாய்க்கொழுப்பெடுத்து பேசிக் கொண்டிருக்கிறார் என அதிமுக மூத்த தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியுள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 36 ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக மூத்தத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இயற்கை பேரிடர் காலத்தில் தமிழக மக்கள் நாதியற்றவர்களாக தவிக்கின்றனர். விரைவில் இந்த நிலை மாற வேண்டும். தமிழக மக்களை காப்பாற்ற நிதானமாக செயல்படக்கூடிய முதல்வராக எடப்படியார் பொறுப்பேற்க வேண்டும். அப்போதுதான் இந்த நிலைமை மாறும். உதயநிதி வாய்க்கொழுப்பு எடுத்து பேசிக் கொண்டிருக்கிறார்.
அவருடைய பேச்சு விரைவில் அவருக்கு சரியான பாடத்தை சொல்லிக் கொடுக்கும். மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய அவர், துடுக்குத்தனமாக பேசி சென்னையிலும் சேலத்திலும் இருந்து கொண்டு ஏதோ வெள்ளத்தில் நீந்தி மக்களின் கஷ்டங்களை நீக்குவது போல பேசுகிறார்.
ஏதோ வாயில் பேசுவது மட்டும் மக்களுக்கு தீர்வாகாது. நேரடியாக செயல்பட்டால் மட்டும் தான் மக்களுக்கு தீர்வாகும். அந்த செயல்பாடு எதுவும் உதயநிதியிடம் இல்லை.
Edited by Siva
