தொடர்புடைய செய்திகள்
- டி.ஆர்.பி ராஜாவுக்கு ஆட்டுக்குட்டி பரிசு..! வன்மத்தை கக்கிய திமுகவினர்!
- வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.. காங்கிரஸ் வேட்பாளர்கள் நிலை என்ன?
- நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் உறுதி
- ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் மக்களுக்காக பணி செய்கிறார் பிரதமர் மோடி -அண்ணாமலை ;
- இரட்டை இலை சின்னத்தை முடக்குங்கள்- ஓ. பன்னீர்செல்வம்
மாநில தன்னாட்சி, நீட் தேர்வு விலக்கு உள்பட முக்கிய அம்சங்கள்: பாமக தேர்தல் அறிக்கை..!
பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளை பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்ட நிலையில் தற்போது அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த தேர்தல் அறிக்கை உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
• நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உறுதி செய்யப்படும்
• அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்படும்
• ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை.
• மத்திய அரசின் வரி வருவாய் மற்றும் மானியத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கை உயர்த்த நவடடிக்கை எடுக்கப்படும்
• காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம்
• தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவோம்
• மாநில அரசுகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்
• தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வரப்படும்
• மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும்
• அரசுத் துறை, பொதுத் துறை பதவி உயர்வுகளிலும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்
edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
