வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 12 செப்டம்பர் 2020 (18:47 IST)

பெட்ரோல் பங்க் இரவு பத்து மணி வரை இயங்கலாம் – தமிழக அரசு

உலகில் கொரொனா தாக்கம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திப் பலரையும் பலிகடா ஆக்கிவரும் நிலையில்,  இத்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் மக்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

முன்னதாக காலை ஆறு மணி முதல் 8 மணி வரை இயங்கிய பெட்ரோல் பங்க் தற்போது,  இரவு மணி வரை இயங்கலாம் என அறிவித்துள்ளது.