வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜனவரி 2019 (17:00 IST)

மிட்நைட்டில் வீடு புகுந்த கள்ளக்காதலன்: உல்லாச விருந்துக்கு பின் விபரீதம்

தூத்துக்குடியில் தனது மகளுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரை தனது மகன்களோடு இணைத்து அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தூத்துக்குடியை சேர்ந்தவர் மைக்கேல் ஜெயராஜ். இவருக்கு 3 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் கலாவுக்கு பெரியசாமி என்பவரை திருமணமானது. பெரியசாமி திருப்பூரில் வேலை செய்து வருகிறார். இதனால் கலா தந்தையின் வீடு அருகே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். 
 
தனியாக வசித்து வந்ததால் சகாயமணி என்பருடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. சகாயமணி அடிக்கடி கலாவின் வீட்டுக்கு சென்று உல்லாசம் அனுபவித்தார்.
இந்த விவகாரம் கலாவின் தந்தைக்கு தெரிய வந்து அவர் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால், அதன் பின்னரும் இவர்களின் கள்ள உறவு தொடர்ந்துள்ளது. 
 
வழக்கம் போல், சகாயமணி கலாவின் வீட்டிற்கு சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் நள்ளிரவைன் தனது மகன்களை அழைத்துக்கொண்டு வந்த கலாவின் தந்தை சகாயமணியை தாக்கியுள்ளனர். 
 
பலத்தகாயம் அடைந்த சகாயமணி உயிருக்கு போராடினார். மருத்துவமைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மைக்கேல் ஜெயராஜ், அவரது 3 மகன்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.